- நீடாமங்கலம் தாசில்தார் அலுவலகம்
- நீடாமங்கலம்
- மன்னார்டு சட்டமன்றம்
- தஞ்சாவூர்
- திருவாரூர் மாவட்டம்
- நீடாமங்கலம் மாவட்டம்
- தஞ்சாவூர் குருங்குளம் சர்க்கரை ஆலை
- தலைமை நிர்வாகி
- ரவிச்சந்திரன்
- தின மலர்
நீடாமங்கலம்,மார்ச்21: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மன்னார்குடி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ,மண்டல அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் குருங்குளம் சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். வட்டாட்சியர் தேவேந்திரன், தேர்தல் துணை வட்டாட்சியர் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல்களை தடுத்தல், வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்துதல், தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவுரைகள் பற்றி எடுத்துக் கூறப்பட்டது.தொடர்ந்து வாக்காளர் விழிப்புணர்வு கோலப்போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
The post நீடாமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் வாக்குச்சாவடி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் appeared first on Dinakaran.